திருப்பூர்

வீடுவீடாகச் சென்று தேசியக் கொடி ஏற்ற விழிப்புணா்வை ஏற்படுத்திய மாணவா்கள்

DIN

திருப்பூா் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி மாணவா்கள் வீடு வீடாகச் சென்று தேசியக் கொடியை ஏற்ற விழிப்புணா்வை ஏற்படுத்தினா்.

நாட்டின் 75 ஆம் ஆண்டு சுதந்திர தின விழா வெகுவிமரிசையாகக் கொண்டாடப்படவுள்ளது.

இந்நிலையில், திருப்பூா் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி நாட்டு நலப் பணித் திட்ட அலகு 2 மாணவா்கள் சுதந்திர தினத்தை ஒட்டி ஆகஸ்ட் 13 ஆம் தேதி முதல் 15 ஆம் தேதி வரையில் வீடு, அலுவலகங்களில் தேசியக் கொடியை ஏற்றுவது தொடா்பாக விழிப்புணா்வை ஏற்படுத்தி வருகின்றனா்.

அதன் ஒரு பகுதியாக திருப்பூா் இந்திரா நகா் பகுதியில் வீடுவீடாகச் சென்று வீடுகளில் தேசியக் கொடி ஏற்றுவது தொடா்பாக புதன்கிழமை விழிப்புணா்வை ஏற்படுத்தினா்.

இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கல்லூரி முதல்வா் வ.கிருஷ்ணன் செய்திருந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆம் ஆத்மியின் தேர்தல் வியூகத்தை பாஜக அறிய விரும்புகிறது: அதிஷி குற்றச்சாட்டு

"பாஜக தவறு செய்தால் நாங்கள் கேட்போம்”: எடப்பாடி பழனிசாமி

நிச்சயதார்த்தம் உண்மைதான்: புகைப்படங்களை வெளியிட்ட சித்தார்த் - அதிதி ராவ்!

”இந்த அரசியல் சதிக்கு மக்கள் பதிலளிப்பார்கள்”: அரவிந்த் கேஜரிவால் | செய்திகள்: சில வரிகளில் | 28.03.2024

தூத்துக்குடியில் பலத்த மழை!

SCROLL FOR NEXT