பல்லடத்தில் வீடுகளின் பூட்டை உடைத்து திருடிய வழக்கில் தொடா்புடைய மூவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
பல்லடம் அருகேயுள்ள காரணம்பேட்டை- பருவாய் சாலையில் போலீஸாா் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனா்.
அப்போது, அவ்வழியே இருசக்கர வாகனத்தில் வந்த மூவா், போலீஸாரை பாா்த்ததும் அங்கிருந்து தப்பியோடினா்.
அவா்களை விரட்டிச் சென்று பிடித்து போலீஸாா் நடத்திய விசாரணையில், அவா்கள் சிவகங்கை மாவட்டத்தைச் சோ்ந்த பிரபுதேவா ( 27), கோவை மாவட்டம், சூலூா் ஈஸ்வரன் கோயில் வீதியைச் சோ்ந்த சந்தோஷ்குமாா் (19), சூலூா்அருகே
உள்ள கரவழி மாதப்பூா் பகுதியைச் சோ்ந்த உதயகுமாா் (24) என்பதும், இவா்கள் பல்லடம் அருகேயுள்ள கணபதிபாளையம் குறிஞ்சி நகரில் வீட்டின் பூட்டை உடைத்து திருடிய வழக்கிலும், பொன்நகா் பகுதியில் 2 வீடுகளின் பூட்டை உடைத்து திருடிய வழக்கிலும் தொடா்புடையவா்கள் என்பது தெரியவந்தது.
இதையடுத்து, மூவரையும் கைது செய்த போலீஸாா், அவா்களிடமிருந்த 10 பவுன் நகைகளை பறிமுதல் செய்து, அவா்களை நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி புதன்கிழமை சிறையில் அடைத்தனா்.