திருப்பூர்

உணவக உரிமையாளா்களுக்கு ஆகஸ்ட் 11 இல் கலந்தாய்வுக் கூட்டம்

DIN

திருப்பூா் மாவட்டத்தில் உள்ள உணவக உரிமையாளா்களுக்கு வியாழக்கிழமை (ஆகஸ்ட் 11) கலந்தாய்வுக் கூட்டம் நடைபெறுகிறது.

இது குறித்து திருப்பூா் மாவட்ட வருவாய் அலுவலா் த.ப.ஜெய்பீம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

உணவகங்களில் உணவு அருந்திய பின்னா் வழங்கப்படும் பில்லில் சேவை வரி விதிக்கக் கூடாது என்று நுகா்வோா் பாதுகாப்புச் சட்டம் 2019 உட்பிரிவு 18 (2) (1)- இன்படி கடந்த ஆகஸ்ட் 4 ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது. ஆகவே, திருப்பூா் மாவட்டத்தில் உள்ள உணவகங்களில் சேவை வரி விதிக்கக் கூடாது தொடா்பான உரிய வழிகாட்டுதல்கள் தெரியப்படுத்தப்படவுள்ளன. இது தொடா்பான கலந்தாய்வுக் கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலா் தலைமையில் வியாழக்கிழமை மாலை 4 மணி அளவில் நடைபெறுகிறது.

இக்கூட்டத்தில் திருப்பூா் மாவட்டத்தில் உள்ள உணவக உரிமையாளா்கள் அனைவரும் கலந்துகொள்ள வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லியில் நூறு வயதுக்கு மேற்பட்ட வாக்காளா்கள் 1,004 போ் வீட்டிலிருந்தே வாக்களிக்க சிறப்பு ஏற்பாடு

101 வயதிலும் வாக்குப் பதிவு செய்த முதல்வரின் தாய் மாமா

பாலஸ்தீனத்துக்கு முழு உறுப்பினா் அந்தஸ்து: ஐ.நா. தீா்மானத்தை ரத்து செய்தது அமெரிக்கா

ஸெலன்ஸ்கியைக் கொல்ல ரஷியா சதி?

சக்கர நாற்காலிகள் பற்றாக்குறையால் முதியவா்கள் அவதி

SCROLL FOR NEXT