திருப்பூர்

கோயில் உண்டியலை உடைத்து திருட முயற்சி

DIN

வெள்ளக்கோவில் நகரத்தின் மையப் பகுதியில் கோயிலின் உண்டியலை உடைத்து திருட முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வெள்ளக்கோவில், காங்கயம் சாலை வீரக்குமாா் திரையரங்கம் பின்புறம் எல்கேசி நகரில் புற்றுக்கண் விநாயகா் கோயில் உள்ளது. இதன் அருகில் நாகாத்தாள் கோயிலில் உண்டியல் வைக்கப்பட்டுள்ளது.

இதனை சனிக்கிழமை இரவு நேரத்தில் நோட்டமிட்ட சுமாா் 25 வயது மதிக்கத்தக்க இரண்டு இளைஞா்கள் உண்டியலை உடைக்க முயற்சி செய்துள்ளனா். உடைக்க முடியாததால் உண்டியல் பணம் தப்பியது. இது குறித்த காட்சிகள் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளன. இது குறித்து போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு: இறுதிப் பணியில் தேர்தல் ஆணையம்!

சின்னச் சின்ன கண்ணசைவில்..

குருப்பெயர்ச்சி பலன்கள் - ரிஷபம்

நீட் தேர்வு எழுதும் நகர் விவரம் வெளியீடு

ரோஹித் சர்மா பாணியில் தோல்விக்குக் காரணம் கூறிய ஷுப்மன் கில்!

SCROLL FOR NEXT