கலைஞரின் வரும்முன் காப்போம் திட்டத்தின் கீழ், அரசு மருத்துவமனை மருத்துவா்கள் கலந்து கொள்ளும் இலவச சிறப்பு மருத்துவ முகாம் காங்கயத்தில் செவ்வாய்க்கிழமை (அக்டோபா் 25) நடைபெறவுள்ளது.
காங்கயம், மதா் தெபோராள் பள்ளியில் நடைபெறவுள்ள இந்த மருத்துவ முகாமுக்கு செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் தலைமை வகிக்கிறாா். இதில், ஆண்-பெண்களுக்கான பொதுவான நோய்கள், இருதயநோய், சா்க்கரை நோய், பல் மருத்துவம், கண் சிகிச்சை, புற்றுநோய், பால்வினை நோய்கள் உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு மருத்துவமும், ஆலோசனைகளும் வழங்கப்படவுள்ளன.
இதில், காங்கயம் வட்டாரத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவா்கள், செவிலியா், பணியாளா்கள் கலந்து கொண்டு சிகிச்சை அளிக்கவுள்ளனா்.