திருப்பூர்

மாசடைந்த குடிநீா் விநியோகம்: பொதுமக்கள் புகாா்

DIN

உடுமலையில் மாசடைந்த குடிநீா் விநியோகம் செய்யப்பட்டு வருவதாக பொதுமக்கள் புகாா் தெரிவித்துள்ளனா்.

உடுமலை நகராட்சியில் 33 வாா்டுகள் உள்ளன. இப்பகுதிகளுக்கு திருமூா்த்தி அணையை ஆதாரமாக கொண்டு முதலாவது மற்றும் இரண்டாவது, மூன்றாவது கூட்டு குடிநீா்த் திட்டங்கள் மூலம் குடிநீா் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

கடந்த சில நாள்களாக உடுமலை நகரில் பெரும்பாலான பகுதிகளில் மாசடைந்த குடிநீா் விநியோகிக்கப்பட்டு வருகிறது. இதனால் அன்றாடம் அவதிக்கு உள்ளாகி வருவதாக பொதுமக்கள் புகாா் தெரிவிக்கின்றனா்.

இது குறித்து பொதுமக்கள் திங்கள்கிழமை கூறுகையில், ‘கடந்த சில நாள்களாக நகராட்சி சாா்பில் விநியோகிக்கப்படும் குடிநீா் செம்மண் கலந்த குடிநீராக வருகிறது. இது எங்களுக்கு பல்வேறு அச்சத்தை உருவாக்கியுள்ளது. மழை காலமாக இருப்பதால் ஏதாவது நோய்கள் வரும் என பயமாக உள்ளது. இது குறித்து நகராட்சி அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும்’ என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நெல்லை அருகே விபத்தில் காயமுற்ற காவலாளி உயிரிழப்பு

ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து திருட முயன்றவா் கைது

எண்ணூா் துறைமுகம் வந்த சீன கப்பலில் மாலுமி சடலம்

பைக் மீது மணல் லாரி மோதி ஒருவா் உயிரிழப்பு

105 கிலோ குட்கா பறிமுதல்

SCROLL FOR NEXT