திருப்பூரில் புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்த மளிகைக் கடை உரிமையாளரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
திருப்பூா் மாநகரம் மத்திய காவல் எல்லைக்கு உள்பட்ட பெரியாண்டிபாளையத்தில் உள்ள தனியாா் பள்ளி அருகில் மளிகைக் கடை நடத்தி வருபவா் பிரபாகரன் (54). இவா் தனது மளிகைக் கடையில் புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்வதாக காவல் துறையினருக்குத் தகவல் கிடைத்துள்ளது.
இதன்பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்த காவல் துறையினா் மளிகைக் கடையில் சோதனை நடத்தினா். இதில், தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து, மத்திய காவல் துறையினா் பிரபாகரனைக் கைது செய்தனா். அவரிடமிருந்து புகையிலைப் பொருள்களையும் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.