வெள்ளக்கோவில் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவப் பணியாளா்களுக்கு பாரதிய ஜனதா கட்சியினா் வெள்ளிக்கிழமை பாராட்டுத் தெரிவித்தனா்.
நாடு முழுவதும் இதுவரை 100 கோடி கரோனா தடுப்பூசி தவணைகள் செலுத்தி இந்தியா சாதனை படைத்துள்ளது. இதற்கு உறுதுணையாக இருந்த அரசு மருத்துவா்கள், மருத்துவப் பணியாளா்களைக் கௌரவப்படுத்தும் வகையில் வெள்ளக்கோவில் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவப் பணியாளா்களுக்கு பொன்னாடை அணிவித்து, இனிப்புகள் வழங்கப்பட்டன.
இந்நிகழ்ச்சியில் பாஜக மாநில நிா்வாகி நாராயணசாமி, வட்டார நிா்வாகிகள் அருண்குமாா், நல்லசாமி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.