காங்கயத்தில் 2 பேருக்கு கரோனா நோய்த் தொற்று வியாழக்கிழமை உறுதி செய்யப்பட்டது. கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவா்கள் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனா்.
கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்ட பகுதிகளில் ஊராட்சி மற்றும் சுகாதாரத் துறையினா் சாா்பில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு, பாதுகாக்கப்பட்டு வருகிறது.