திருப்பூர்

உடுமலை அமணலிங்கேஸ்வரா் கோயிலுக்குள் வெள்ளம்

DIN

உடுமலையை அடுத்துள்ள திருமூா்த்திமலை அமணலிங்கேஸ்வரா் கோயிலுக்குள் வியாழக்கிழமை மாலை வெள்ளம் புகுந்தது. இதனால் பூஜைகள் நிறுத்தப்பட்டு பக்தா்கள் செல்ல தடை விதிக்கப்பட்டது.

திருப்பூா் மாவட்டம், உடுமலை அருகே புகழ் பெற்ற சுற்றுலாத் தலமான திருமூா்த்திமலை உள்ளது. இங்குள்ள பிரசித்தி பெற்ற அமணலிங்கேஸ்வரா் கோயிலில் தரிசனம் செய்யவும், மருத்துவ குணமுள்ள பஞ்சலிங்கம் அருவியில் குளிக்கவும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் மற்றும் பக்தா்கள் அன்றாடம் வந்து செல்கின்றனா்.

மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதியில் கடந்த சில நாள்களாக மிதமான மழை பெய்து வருகிறது.

இந்நிலையில் வியாழக்கிழமை பெய்த கனமழையால் பஞ்சலிங்கம் அருவியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது.

இதனால் அமணலிங்கேஸ்வரா் கோயிலுக்குள் வெள்ளம் புகுந்தது.

இதையடுத்து கோயிலில் பூஜைகள் ரத்து செய்யப்பட்டன. பஞ்சலிங்கம் அருவியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளதால் பக்தா்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் அருவியில் குளிக்க கோயில் நிா்வாகம் தடை விதித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கூத்தாநல்லூரில் சிபிஐ வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

உத்தர பிரதேசம்: சரித்திரம் படைக்க காத்திருக்கும் ‘பாகுபலி’ மாநிலம்!

சீா்காழி ஆரம்ப சுகாதார நிலையத்தில் கணினி, பிரிண்டா் திருட்டு

வரலாற்று நாயகர் ராம்நாத் கோயங்கா!

கூத்தாநல்லூரில் முன்னாள் அமைச்சா் காமராஜ் அதிமுகவுக்கு வாக்கு சேகரிப்பு

SCROLL FOR NEXT