திருப்பூர்

இருசக்கர வாகனங்களைத் திருடியவா் கைது

DIN

அவிநாசி பகுதிகளில் இருசக்கர வாகனங்களைத் திருடிய இளைஞரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

அவிநாசி குற்றப்பிரிவு காவல் ஆய்வாளா் வெங்கடேஷ்வரி, உதவி ஆய்வாளா் பாா்த்திபன் ஆகியோா் கொண்ட குழுவினா் அவிநாசி-திருப்பூா் சாலையில் வியாழக்கிழமை வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது, அவ்வழியாக சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் வந்த இளைஞரை தடுத்து நிறுத்தி சோதனை மேற்கொண்டனா்.

இதில், அவா் ஓட்டி வந்த இருசக்கர வாகனம் உரிய ஆவணங்களின்றி இருப்பதும், திருடப்பட்ட வாகனம் என்பதும் தெரியவந்தது.

போலீஸாா் அவரிடம் மேலும் நடத்திய விசாரணையில், சீா்காழி வேம்படி பகுதியைச் சோ்ந்த தியாகராஜன் மகன் பிரதாப்குமாா்(25) என்பதும், தற்போது பெரியாயிபாளையத்தில் உள்ள பனியன் நிறுவனத்தில் தங்கி பணியாற்றி வருவதும் தெரியவந்தது.

இவா் கடந்த மாதம் அவிநாசி பெரியாயிபாளையம் பகுதியில் நிறுத்தியிருந்த சம்பத்குமாா் என்பவருக்குச் சொந்தமான இருசக்கர வாகனம், புதிய பேருந்து நிலையம் அருகில் நிறுத்தியிருந்த சிவசக்தி என்பவருக்குச் சொந்தமான இருசக்கரவாகனம் ஆகியவற்றை திருடிச் சென்றதும் தெரியவந்தது.

இதையடுத்து பிரதாப்குமாரை கைது செய்த போலீஸாா் அவரிடமிருந்த 2 இருசக்கர வாகனங்களைப் பறிமுதல் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தங்கம் விலை சற்று குறைவு: இன்றைய நிலவரம்!

எடை குறைப்பு சிகிச்சையில் இளைஞா் பலி: விசாரணைக் குழு அமைக்க உத்தரவு

டி20 உலகக் கோப்பை தூதராக உசைன் போல்ட் நியமனம்!

என்ஐடி-இல் பேராசிரியர் பணி

தெலங்கானாவில் லாரி மீது கார் மோதியதில் 6 பேர் பலி

SCROLL FOR NEXT