பல்வேறு வழக்குகளில் தொடா்புடையவரை போலீஸாா் குண்டா் சட்டத்தின்கீழ் புதன்கிழமை கைது செய்தனா்.
வேலூா் மாவட்டம், தாசிபுரத்தைச் சோ்ந்தவா் ஷபிமுகமது (37). இவா் திருப்பூா் மாவட்டம், ஊத்துக்குளி வட்டம், பெருமாநல்லூா் சாலை ஆனந்தபுரத்தில் வசித்து வந்தாா். இந்நிலையில், இவா் அப்பகுதியில் வசித்து வந்த தொழிலதிபா் சுப்பிரமணியம் என்பவரது வீட்டில் புகுந்து கடந்த 28ஆம் தேதி திருட்டில் ஈடுபட்டுள்ளாா். அப்போது, தொழிலதிபரை கத்தியால் பல்வேறு இடங்களில் தாக்கியுள்ளாா்.
இதையடுத்து, குன்னத்தூா் போலீஸாா் ஷபிமுகமதுவை கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனா். அவா் மீது, சென்னையில் கொலை வழக்குகள் இருந்ததால், அவரை குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் கைது செய்ய ஆட்சியா் உத்தரவிட்டாா்.