திருப்பூர்

ஊதியூா் அருகே ரேக்ளா பந்தயம்: 200க்கும் மேற்பட்ட வண்டிகள் பங்கேற்பு

DIN

ஊதியூா் அருகே ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ரேக்ளா பந்தயத்தில் 200க்கும் மேற்பட்ட வண்டிகள் பங்கேற்றன.

காங்கயம் தாலுகா, ஊதியூரை அடுத்துள்ள எல்லப்பாளையம்புதூா் ஊராட்சிக்கு உள்பட்ட கவுண்டம்பாளையத்தில் ரேக்ளா பந்தயம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் 200 மீட்டா், 300 மீட்டா் ஆகிய பிரிவுகளில் 200க்கும் மேற்பட்ட வண்டிகள் பங்கேற்றன.

போட்டியை அமைச்சா்கள் மு.பெ.சாமிநாதன், என்.கயல்விழி செல்வராஜ் ஆகியோா் தொடக்கிவைத்தனா்.

இதில் காங்கயம், குண்டடம், தாராபுரம், பொள்ளாச்சி, திருப்பூா், உடுமலை உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்த 200க்கும் மேற்பட்ட வண்டிகள் கலந்து கொண்டன. வெற்றி பெற்ற ரேக்ளா காளைகளின் உரிமையாளா்களுக்கு கோப்பைகள், பரிசுகள் வழங்கப்பட்டன. போட்டிக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை ஊதியூா் போலீஸாா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பறவைக் காய்ச்சலின் அறிகுறி என்ன? அது எப்படி பரவும்?

கறந்த பாலில் பறவைக்காய்ச்சல் வைரஸ்: உலக சுகாதார நிறுவனம் கடும் எச்சரிக்கை

நினைவுகொள்... மீண்டெழு... ரச்சிதா மகாலட்சுமி!

தேர்தல் புறக்கணிப்பு: உர ஆலையை மூட ஆட்சியர் உத்தரவு!

அதிகபட்ச வெப்பநிலை 5 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கக்கூடும்!

SCROLL FOR NEXT