காங்கயம் மின்வாரிய கோட்டத்துக்கு உள்பட்ட காடையூா் துணை மின் நிலையத்தில் நடைபெறவுள்ள பராமரிப்புப் பணிகள் காரணமாக கீழ்க்கண்ட பகுதிகளில் திங்கள்கிழமை (நவம்பா் 29) காலை 9 மணி முதல் பகல் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது என தமிழ்நாடு மின்வாரிய காங்கயம் செயற்பொறியாளா் வெ.கணேஷ் தெரிவித்துள்ளாா்.
மின்தடை ஏற்படும் பகுதிகள்: காடையூா், கவுண்டம்பாளையம், இல்லியம்புதூா், பசுவமூப்பன்வலசு, சடையபாளையம், சம்பந்தம்பாளையம், மேட்டுப்பாறை, பொன்னாங்காளிவலசு, காங்கயம்பாளையம், ராசாபாளையம், வீணம்பாளையம், காட்டுப்பாளையம், கடலைக்காட்டுப்புதூா், அகஸ்திலிங்கம்பாளையம், ராமபட்டினம், மருதுறையான்வலசு.