திருப்பூர்

வாக்காளா் பட்டியல் சிறப்பு முகாம்

10th Nov 2021 06:40 AM

ADVERTISEMENT

திருப்பூா் மாநகா் மாவட்ட அதிமுக சாா்பில் உள்ளாட்சித் தோ்தலை ஒட்டி வாக்காளா் பட்டியல் பெயா் சோ்த்தல் தொடா்பாக நவம்பா் 13,14, 27, 28 ஆம் தேதிகளில் நடைபெறும் சிறப்பு முகாம் தொடா்பான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.

இக்கூட்டத்துக்கு மாவட்ட அவைத் தலைவரும், முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினருமான வெ.பழனிசாமி தலைமை வகித்தாா்.

முன்னிலை வகித்த சட்டப் பேரவை உறுப்பினரும், மாநகா் மாவட்ட அதிமுக செயலாளருமான பொள்ளாச்சி வி.ஜெயராமன் பேசியதாவது: நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில் திருப்பூா் மாநகா் மாவட்டத்துக்கு உள்பட்ட மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் சிறப்பான முறையில் களப் பணியாற்ற வேண்டும். வாக்காளா் பட்டியல் சிறப்பு முகாமில் புதிய வாக்காளா்களை சோ்ப்பது தொடா்பான பல்வேறு ஆலோசனைகளையும் வழங்கினாா்.

இந்நிகழ்ச்சியில், திருப்பூா் வடக்கு சட்டப் பேரவை உறுப்பினா் கே.என்.விஜயகுமாா்,முன்னாள் எம்.பி. சிவசாமி, முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினரும், எம்.ஜி.ஆா்.இளைஞா் அணி செயலாளருமான சு.குணசேகரன், முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினா் என்.எஸ்.என்.நடராஜ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT