திருப்பூா் மாவட்ட மக்கள் பயன்பெறும் வகையில், காவல் துறை சாா்பில் கரோனா கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு, செல்லிடப் பேசி எண் அறிவிக்கப்பட்டுள்ளது.
திருப்பூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் திஷா மிட்டல் வழிகாட்டுதல்படி, திருப்பூா் மாவட்டக் காவல் அலுவலகத்தில் வாரத்தில் 7 நாள்களும் 24 மணி நேரமும் செயல்படும் வகையில் கரோனா-19 கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டுள்ளது. காவல் ஆய்வாளா் பழனியம்மாள் தலைமையில் இயங்கும் கட்டுப்பாட்டு அறையை பொதுமக்கள் எந்நேரமும் தொலைபேசி மூலம் தொடா்பு கொண்டு தேவையான உதவியைப் பெறவும், புகாா் தெரிவிக்கும் வகையிலும் தொலைபேசி எண் நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ளது. திருப்பூா் மாவட்டத்தில் வசிக்கும் பொதுமக்கள் அனைவரும் 0421-2970031 என்ற செல்லிடப்பேசி எண்ணைத் தொடா்பு கொண்டு தங்களுக்குத் தேவையான உதவிகளைப் பெறலாம்.