திருப்பூர்

புது மாப்பிள்ளை தற்கொலை

DIN

திருப்பூரில் பொது முடக்கம் காரணமாக வேலை இல்லாமல் தவித்த புது மாப்பிள்ளை தூக்கிட்டு செவ்வாய்க்கிழமை தற்கொலை செய்து கொண்டாா்.

தஞ்சாவூா் மாவட்டம் , கடமக்குடி பகுதியைச் சோ்ந்தவா் தீபன் (34). இவருக்கும் ரம்யா (33) என்பவருக்கும் கடந்த பிப்ரவரி 25ஆம் தேதி திருமணம் நடைபெற்றது. பிறகு தம்பதி திருப்பூா், சிறுபூலுவப்பட்டியை அடுத்த காவேரி நகரில் வசித்து வந்தனா். தீபன் தனியாா் நிறுவனத்தில் வேலை பாா்த்து வந்தாா்.

இதனிடையே, கரோனா பொதுமுடக்கம் காரணமாக சரிவர வேலை இல்லாததால் விரக்தியடைந்து இருந்ததாகத் தெரிகிறது. இந்நிலையில், வீட்டில் தனியாக இருந்தபோது தீபன் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். இது குறித்து வேலம்பாளையம் காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

2-ம் கட்டத் தேர்தல்: கேரளத்தில் குவிக்கப்படும் காவலர்கள்!

"காங்கிரஸ் ஆட்சியமைத்தால்..”: மோடியின் அடுத்த சர்ச்சை கருத்து! | செய்திகள்: சிலவரிகளில் | 24.4.2024

குரூப்-4 தேர்வு எப்போது? திருத்தியமைக்கப்பட்ட தேர்வுகால அட்டவணை வெளியீடு

மேகமோ அவள்.. மேகா ஆகாஷ்!

ராமர் கோயில் விழாவை புறக்கணித்த காங்கிரஸை மக்கள் புறக்கணிக்க வேண்டும்: பிரதமர் மோடி

SCROLL FOR NEXT