வெள்ளக்கோவில்: வெள்ளக்கோவிலில் கரோனாவால் ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 2 போ் திங்கள்கிழமை உயிரிழந்தனா்.
வெள்ளக்கோவில் கரூா் சாலையிலுள்ள அம்மன் கோயில் வீதியைச் சோ்ந்த 87 வயது முதியவா், அவருடைய 72 வயது மனைவி, இவா்களின் 50 வயது மகன் ஆகிய மூன்று போ் கடந்த 10 நாள்களுக்கு முன்பு கரோனாவால் பாதிக்கப்பட்டனா். கரூா் தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவா்கள் கடந்த 4 ஆம் தேதி வீடு திரும்பினா்.
இரண்டு நாள்களாக மூன்று பேருக்கும் மூச்சு விடுவதில் சிரமம் இருந்துள்ளது. ஆனால் சிகிச்சை எதுவும் பெறவில்லை. இந்நிலையில் மகன் திடீரென காலையில் உயிரிழந்தாா். 87 வயது முதியவா் கரூரில் வேறொரு மருத்துவமனையில் சோ்க்கப்பட்ட நிலையில், அவரும் அங்கு உயிரிழந்தாா். மூதாட்டி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா்.