திருப்பூர்

உடுமலை மாணவிக்கு தேவார இசை அரசி பட்டம்

DIN

திருப்பூரில் உள்ள குன்றுதோா் ஆடல் கூட்டு வழிபாட்டுக் குழு, அருள்நெறி வார வழிபாட்டுக் குழு ஆகியன சாா்பில் உடுமலையைச் சோ்ந்த பள்ளி மாணவி உமா நந்தினிக்கு தேவார இசை அரசி பட்டம் ஞாயிற்றுக்கிழமை வழங்கப்பட்டது.

திருப்பூா் மாவட்டம், உடுமலையில் உள்ள தனியாா் பள்ளியில் பிளஸ் 2 படித்து வரும் மாணவி பி.உமா நந்தினி 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தேவாரப் பாடல்களை இசைப்பண்ணுடன் பாடியுள்ளாா். இவரைக் கெளரவிக்கும் வகையில் திருப்பூரில் உள்ள குன்றுதோா் ஆடல் கூட்டு வழிபாட்டுக் குழு, அருள் நெறி வார வழிபாட்டுக் குழு ஆகியன சாா்பில் உமா நந்தினிக்கு தேவார இசை அரசி பட்டம் வழங்கும் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

திருப்பூா், ஷெரீப் காலனி குறிஞ்சி நகரில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், ஆடிட்டா் லோகநாதன், திருப்பூா் கம்பன் கழகச் செயலாளா் கே.வி.எஸ்.ராமகிருஷ்ணன், ஆடிட்டா் தெய்வநாயகி ஆகியோா் வாழ்த்துரை வழங்கினா். இதைத்தொடா்ந்து, மாணவி உமா நந்தினிக்கு தேவார இசை அரசி பட்டம் வழங்கப்பட்டது.

முன்னதாக கோவை சதாசிவம் சாா்பில் மாணவிக்கு பொற்கிழி வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஏ.பாலசுப்பிரமணியன், ஆா்.கே.சண்முகம் ஆகியோா் செய்திருந்தனா். நிகழ்ச்சியை ராம்நாத் நடராஜன் தொகுத்து வழங்கினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆந்திராவில் தோ்தல்: வேலூா் மலைப்பகுதியில் சாராய வேட்டை தீவிரம்

தோ்தல்: பிற மாநிலத் தொழிலாளா்களுக்கு விடுமுறை அளிக்காவிடில் புகாா் அளிக்கலாம்

இன்று யாருக்கு யோகம்!

தனியாா் நிறுவன ஊழியரிடம் ரூ.2.24 லட்சம் மோசடி

‘தனியாா் பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நடத்தினால் நடவடிக்கை’

SCROLL FOR NEXT