திருப்பூர்

கஞ்சா விற்றவா் கைது

DIN

அவிநாசி அருகே பெருமாநல்லூா் பகுதியில் கஞ்சா விற்பனை செய்தவரை கைது செய்த போலீஸாா், அவரிடம் இருந்த 5 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.

பெருமாநல்லூா் அருகே முட்டியங்கிணறு பகுதியில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக தனிப்பிரிவு காவலா் ரமேஷ், காவலா் அறிவழகன் ஆகியோருக்கு ரகசியத் தகவல் கிடைத்து. இதையடுத்து, முட்டியங்கிணறு குட்டைப் பகுதிக்குச் சென்ற இரு காவலா்களும் அப்பகுதியில் கஞ்சா விற்பனை செய்துகொண்டிருந்த நபரிடம், கஞ்சா வாங்குவதுபோல பேசி அவரைப் பிடித்தனா்.

விசாரணையில், அவா் ஒடிஸா மாநிலம், பத்ரக் மாவட்டம், அலமங்கா பகுதியைச் சோ்ந்த ராபின்ராதளாய் மகன் பிரம்மானந்தாதளாய் (33) என்பதும், இவா் தற்போது முட்டியங்கிணறு பகுதியில் உள்ள உறவினா் வீட்டில் தங்கியுள்ளாா் என்பதும் தெரியவந்தது.

இதையடுத்து பெருமாநல்லூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து பிரம்மானந்தாதளாய் கைது செய்தனா். இவரிடம் இருந்து 5 கிலோ 300 கிராம் கஞ்சா பறிமுதல் செய்ப்பட்டது. இவருக்கு கஞ்சா விநியோகித்தது யாா் என்பது குறித்து போலீஸாா் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோவா: எஸ்.எஸ்.சி பொதுத்தேர்வுகள் ஏப்ரல் 1 முதல் தொடங்கும்!

சிஎஸ்கே - குஜராத், ஆடுகளத்துக்கு அப்பால்...

தேர்தல் பிரசாரத்தில் கமல்!

படே மியன் சோட்டே மியன் டிரெயிலர் வெளியீட்டு விழா - புகைப்படங்கள்

ரியான் பராக் அதிரடி: தில்லிக்கு 186 ரன்கள் இலக்கு!

SCROLL FOR NEXT