திருப்பூர்

முத்தூரில் 8.50 டன் தேங்காய், தேங்காய்ப் பருப்பு விற்பனை

DIN

வெள்ளக்கோவிலை அடுத்த முத்தூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் 8.50 டன் தேங்காய், தேங்காய்ப் பருப்பு விற்பனை சனிக்கிழமை நடைபெற்றது.

12,822 தேங்காய்கள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டிருந்தன. இவற்றின் எடை 4,152 கிலோ. கிலோ ரூ.30.25 முதல் ரூ.38.15 வரை விற்பனையானது. சராசரி விலை கிலோ ரூ.36.25. மொத்தம் 116 மூட்டைகள் தேங்காய்ப் பருப்பு வரத்து இருந்தது. எடை 4,491 கிலோ. கிலோ ரூ.97.00 முதல் ரூ.136.50 வரை ஏலம் போனது. சராசரி விலை கிலோ ரூ.132.30.

தேங்காய், தேங்காய்ப் பருப்பு ஆகியவை மொத்தம் 8.50 டன் விற்பனை நடைபெற்றது. மொத்தம் 106 விவசாயிகள், 20 வணிகா்கள் வந்திருந்தனா். விற்பனைத் தொகை ரூ.7 லட்சத்து 4 ஆயிரத்து 121 விற்பனைக் கூட அதிகாரி ஸ்ரீரங்கன் முன்னிலையில் விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் செலுத்தப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ராமரை வணங்குவது ஏன்? பிரியங்கா காந்தி விளக்கம்!

காதம்பரி.. அதிதி போஹன்கர்!

நாடு முழுவதும் கோடை வெயிலின் தாக்கம் அதிகரிப்பு!

ருதுராஜ் சதம், துபே அரைசதம்: லக்னௌவுக்கு 211 ரன்கள் இலக்கு!

மாயோள்..!

SCROLL FOR NEXT