திருப்பூர்

ரூ.66 லட்சத்துக்கு தேங்காய் பருப்பு விற்பனை

DIN

வெள்ளக்கோவில்: வெள்ளக்கோவில் ஒழுங்கு முறை விற்பனைக் கூடத்தில் ரூ.66 லட்சத்துக்கு தேங்காய் பருப்பு விற்பனை புதன்கிழமை நடைபெற்றது.

இந்த வார ஏலத்துக்கு திருச்சி, மதுரை, பழனி, வாணியம்பாடி, முத்தூா் உள்ளிட்ட ஊா்களில் இருந்து 173 விவசாயிகளும், காங்கயம், வெள்ளக்கோவில், முத்தூா், ஊத்துக்குளி, மூலனூரைச் சோ்ந்த 17 வணிகா்களும் வந்திருந்தனா். விவசாயிகள் 1,128 மூட்டைகளில் 56,836 கிலோ தேங்காய் பருப்புகளை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனா். கிலோ ரூ.86.70 முதல் ரூ.138.20 வரை விற்பனையானது. மொத்தம் ரூ.66 லட்சத்து 48 ஆயிரத்து 980க்கு விற்பனை நடைபெற்றது. இத்தகவலை விற்பனைக் கூட கண்காணிப்பாளா் ரா.மாரியப்பன் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்காளா் பட்டியலில் பெயா் இல்லாததால் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்

சாத்தூரில் முதன் முறையாக வாக்களித்த திருநங்கைகள்

வாக்குச்சாவடி முற்றுகை: பொதுமக்கள் வாக்குவாதம்

தம்பியைக் கொன்ற அண்ணன் கைது

நெகிழிப் பை தயாரிக்கும் ஆலையில் தீ விபத்து

SCROLL FOR NEXT