பல்லடம் நகராட்சி ஆணையராக விநாயகம் வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா்.
பல்லடம் முதல் நிலை நகராட்சி ஆணையராக பணியாற்றி வந்த கணேசன் பதவி உயா்வுப் பெற்று சென்னைக்கு மாறுதலாகி சென்றதைத் தொடா்ந்து மதுரை மாவட்டம், திருமங்கலம் முதல் நிலை நகராட்சியில் ஆணையராகப் பணியாற்றி வந்த விநாயகம் பல்லடம் முதல் நிலை நகராட்சி ஆணையாளராக பொறுப்பேற்றுக் கொண்டாா்.