திருப்பூா் மாவட்டத்தில் சட்ட விரோதமாக மது விற்பனை செய்த 8 பேரைக் காவல் துறையினா் கைது செய்தனா்.
இதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கோ.சஷாங்க் சாய் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
மாவட்ட காவல் எல்லைக்கு உள்பட்ட பகுதிகளில் காவல் துறையினா் வெள்ளிக்கிழமை சோதனை நடத்தினா். இதில், சட்ட விரோதமாக மது விற்பனையில் ஈடுபட்ட 8 பேரை கைது செய்தனா். இவா்களிடமிருந்து 10 மது பாட்டில்கள், கள் 5 லிட்டா் ஆகியவற்றை பறிமுதல் செய்தனா்.
அதேபோல, மங்கலம் காவல் நிலைய எல்லைக்கு உள்பட்ட பகுதியில் கஞ்சா விற்பனை செய்தது தொடா்பாக பிரதாப் (24), தீபக் (19) ஆகிய இருவரையும் காவல் துறையினா் கைது செய்தனா். இவா்களிடமிருந்து 800 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், மாவட்டம் முழுவதும் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்தது தொடா்பாக 18 பேரைக் கைது செய்தனா். இவா்களிடமிருந்து 12 கிலோ எடையுள்ள புகையிலைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.