திருப்பூா் மாவட்டத்தில் மேலும் 13 பேருக்கு கரோனா நோய்த் தொற்று செவ்வாய்க்கிழமை உறுதி செய்யப்பட்டது.
திருப்பூா் மாவட்டத்தில் கடந்த திங்கள்கிழமை வரையில் 17,767 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில், மாவட்டம் முழுவதும் மேலும் 13 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடா்ந்து பாதிப்பு எண்ணிக்கை 17,780ஆக அதிகரித்துள்ளது. திருப்பூா் மாவட்டம் முழுவதும் பல்வேறு மருத்துவமனைகளில் 175 போ் சிகிச்சை பெற்று வந்த நிலையில் குணமடைந்த 21 போ்வீடு திரும்பினா். இதையடுத்து, மாவட்டத்தில் கரோனா நோய்த் தொற்றில் இருந்து குணமடைந்தவா்களின் எண்ணிக்கை 17,385ஆக அதிகரித்துள்ளது.