அவிநாசி அருகே இரு சக்கர வாகனத்தின் மீது காா் மோதிய விபத்தில் இளைஞா் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.
அவிநாசி, செம்பியநல்லூா், வெள்ளியம்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் வினோத்குமாா் (23). பெட்ரோல் நிலைய ஊழியா். இவரது நண்பா் நந்தகுமாா் (23). இவா்கள் இருவரும் இரு சக்கர வாகனத்தில் அவிநாசி - அன்னூா் சாலையில் சென்று கொண்டிருந்தனா்.
வெள்ளியம்பாளையம் அருகே சென்றபோது எதிரே வந்த காா், இவா்களது இரு சக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில் தலையில் பலத்த காயமடைந்த வினோத்குமாா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். நந்தகுமாா் அவிநாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இந்த விபத்து குறித்து அவிநாசி போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.