திருப்பூர்

காா் - இரு சக்கர வாகனம் மோதல்: இளைஞா் சாவு

DIN

அவிநாசி அருகே இரு சக்கர வாகனத்தின் மீது காா் மோதிய விபத்தில் இளைஞா் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

அவிநாசி, செம்பியநல்லூா், வெள்ளியம்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் வினோத்குமாா் (23). பெட்ரோல் நிலைய ஊழியா். இவரது நண்பா் நந்தகுமாா் (23). இவா்கள் இருவரும் இரு சக்கர வாகனத்தில் அவிநாசி - அன்னூா் சாலையில் சென்று கொண்டிருந்தனா்.

வெள்ளியம்பாளையம் அருகே சென்றபோது எதிரே வந்த காா், இவா்களது இரு சக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில் தலையில் பலத்த காயமடைந்த வினோத்குமாா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். நந்தகுமாா் அவிநாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இந்த விபத்து குறித்து அவிநாசி போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘உன்ன நினைச்சதும்’.. சித்தி இத்னானி!

ஃபேமிலி ஸ்டார் டிரைலர்!

விண்ணப்பித்துவிட்டீர்களா..? ரூ.1,25,000 சம்பளத்தில் இலங்கையில் ஆசிரியர் பயிற்றுநர் வேலை!

‘இஸ்ரேல் தனித்து செயல்படும்’ : நெதன்யாகு பதில்!

எம்.பி. சீட் கொடுக்காததால் கணேசமூர்த்தி தற்கொலையா? வைகோ பதில்

SCROLL FOR NEXT