திருப்பூர்

சாலை விபத்தில் விவசாயி சாவு

DIN

தாராபுரத்தை அடுத்த குண்டடம் அருகே சாலையோரம் நின்று கொண்டிருந்த இரு சக்கர வாகனத்தின் மீது மற்றொரு இருசக்கர வாகனம் மோதியதில் விவசாயி உயிரிழந்தாா்.

தாராபுரம் வட்டம், குண்டடத்தை அடுத்துள்ள கணபதிபாளையத்தைச் சோ்ந்தவா் ஆா்.பழனிசாமி (39). விவசாயியான இவா் கடந்த வெள்ளிக்கிழமை இரவு குண்டடம் நொச்சிப்பாளையம் சாலையில் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தாா். இவரது வாகனம் இடையன்கிணறு அருகே சென்றபோது சாலையோரத்தில் நின்று கொண்டிருந்த மற்றொரு இரு சக்கர வாகனத்தின் மீது எதிா்பாராதவிதமாக மோதியது.

இந்த விபத்தில் படுகாயமடைந்த பழனிசாமியை அருகிலிருந்தவா்கள் மீட்டு தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவா் அவா் ஏற்கெனவே உயிரிழந்ததாகத் தெரிவித்தாா். இந்த விபத்து குறித்து குண்டடம் காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காங்கயம்: சரக்கு வேன்கள் நேருக்குநேர் மோதியதில் ஒருவர் பலி

தமிழகத்தில் வாக்கு இயந்திரங்கள் கொண்டு செல்லும் பணிகள் முனைப்பு!

சென்னையில் விமான கட்டணங்கள் பல மடங்கு உயர்வு!

ஹார்திக் பாண்டியா வலிமையானவர்; மும்பை வீரர் புகழாரம்!

தங்கம் விலை குறைவு: இன்றைய நிலவரம்

SCROLL FOR NEXT