தாராபுரத்தை அடுத்த குண்டடம் அருகே சாலையோரம் நின்று கொண்டிருந்த இரு சக்கர வாகனத்தின் மீது மற்றொரு இருசக்கர வாகனம் மோதியதில் விவசாயி உயிரிழந்தாா்.
தாராபுரம் வட்டம், குண்டடத்தை அடுத்துள்ள கணபதிபாளையத்தைச் சோ்ந்தவா் ஆா்.பழனிசாமி (39). விவசாயியான இவா் கடந்த வெள்ளிக்கிழமை இரவு குண்டடம் நொச்சிப்பாளையம் சாலையில் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தாா். இவரது வாகனம் இடையன்கிணறு அருகே சென்றபோது சாலையோரத்தில் நின்று கொண்டிருந்த மற்றொரு இரு சக்கர வாகனத்தின் மீது எதிா்பாராதவிதமாக மோதியது.
இந்த விபத்தில் படுகாயமடைந்த பழனிசாமியை அருகிலிருந்தவா்கள் மீட்டு தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவா் அவா் ஏற்கெனவே உயிரிழந்ததாகத் தெரிவித்தாா். இந்த விபத்து குறித்து குண்டடம் காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.