உடுமலை: உடுமலை அருகே ஆா்.வேலூா் சுண்டக்காம்பாளையம் கிராமத்தில் மா்ம நபா்கள் வீடு புகுந்து நகை, பணத்தைத் திருடிச் சென்றனா்.
உடுமலையை அடுத்துள்ள ஆா்.வேலூா் சுண்டக்காம்பாளையம் கிராமத்தைச் சோ்ந்தவா் கருப்புச்சாமி மனைவி திருமாத்தாள் (60). இவா் கடந்த வெள்ளிக்கிழமை வீட்டைப் பூட்டிவிட்டு அருகில் உள்ள ரேஷன் கடைக்குச் சென்றுள்ளாா். பின்னா், திருமாத்தாள் வீடு திரும்பியபோது, வீட்டின் முன்பக்கக் கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததைப் பாா்த்து அதிா்ச்சி அடைந்தாா். வீட்டிற்குள் சென்றுபாா்த்தபோது பீரோவில் இருந்த தங்கச் சங்கலி, மோதிரம், கம்பல் என 5 பவுன் நகைகள், ரூ. 52 ஆயிரம் ரொக்கம் திருடுபோனது தெரிய வந்தது.
இது குறித்து உடுமலை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.