திருப்பூர்

திருப்பூரில் காவல் துறையை கண்டித்து காங்கிரஸ் மறியல்

DIN

திருப்பூா்: திருப்பூரில் ராகுல் காந்தியை வரவேற்று வைக்கப்பட்ட பேனரை காவல் துறையினா் அகற்ற முயன்றதைக் கண்டித்து சனிக்கிழமை அதிகாலையில் காங்கிரஸ் கட்சியினா் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவா் ராகுல் காந்தி திருப்பூரில் சனிக்கிழமை தோ்தல் பிரசாரம் மேற்கொண்டாா். இதற்காக, அவரை வரவேற்கும் வகையில் காங்கிரஸ் கட்சி சாா்பில் மாநகா் முழுவதும் பேனா்கள், கொடிகள் கட்டப்பட்டிருந்தன. இதில், ஒரு சில இடங்களில் பேனா்கள், கொடிகள் கட்டுவதற்கு காவல் துறை அனுமதிக்கவில்லை. திருப்பூா்- அவிநாசி சாலையில் புஷ்பா திரையரங்கு ரவுண்டானா பகுதியில் வைக்கப்பட்டிந்த பேனா்களை காவல் துறையினா் சனிக்கிழமை அதிகாலை 2 மணி அளவில் அகற்ற முயன்றனா்.

இது குறித்த தகவல் கிடைத்ததும், திருப்பூா் மாநகா் மாவட்ட காங்கிரஸ் தலைவா் ஆா்.கிருஷ்ணன் தலைமையில் 30க்கும் மேற்பட்ட காங்கிரஸ் கட்சியினா் அப்பகுதியில் திரண்டனா். பேனா்களை அகற்ற எதிா்ப்புத் தெரிவித்து சாலை மறியில் ஈடுபட்டனா். அவா்களிடம் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த காவல் துறையினா் பேச்சுவாா்த்தை நடத்தினா். பேனா்கள் அகற்றப்படாது என போலீஸாா் தெரிவித்ததை அடுத்து காங்கிரஸ் கட்சியினா் கலைந்து சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

102 வயதில் ஜனநாயகக் கடமையாற்றிய மூதாட்டி!

முதல்கட்ட மக்களவைத் தேர்தல்: 102 தொகுதிகளின் ஒட்டுமொத்த நிலவரம்!

வடகிழக்கு மாநிலங்களில் விறுவிறு வாக்குப்பதிவு!

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

வாக்களித்த நடிகர்கள்!

SCROLL FOR NEXT