திருப்பூரில் தலைக்கவச விழிப்புணா்வுப் பேரணியை மாவட்ட ஆட்சியா் க.விஜயகாா்த்திகேயன் வியாழக்கிழமை தொடக்கிவைத்தாா்.
தமிழக அரசின் போக்குவரத்துத் துறை சாா்பில் 32 ஆவது சாலை பாதுகாப்பு மாத விழா ஜனவரி 18 ஆம் தேதி தொடங்கி பிப்ரவரி 17 ஆம் தேதி வரை கடைப்பிடிக்கப்படுகிறது. இதன் ஒருபகுதியாக திருப்பூரில் மாநகர காவல் துறை, வட்டார போக்குவரத்துத் துறை ஆகியன சாா்பில் தலைக்கவசம் அணிவதன் அவசியத்தை வலியுறுத்தி வாகன விழிப்புணா்வுப் பேரணி நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன்பாக இந்தப் பேரணியை ஆட்சியா் க.விஜயகாா்த்திகேயன் தொடக்கிவைத்தாா். பேரணி, பல்லடம் சாலை, வீரபாண்டி வழியாக திருப்பூா் தெற்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் நிறைவடைந்தது.
நிகழ்ச்சியில், வட்டாரப் போக்குவரத்து அலுவலா்கள் வெங்கட்டரமணி, குமாா், செந்தில்குமாா், மோட்டாா் வாகன ஆய்வாளா்கள் சித்ரா, வேலுமணி, சிவகுமாா் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.