திருப்பூா் மாவட்டத்தில் விவசாயிகளுக்கான மாதாந்திர குறைதீா் கூட்டமானது வரும் ஜனவரி 21ஆம் தேதி காணொலிக் காட்சி மூலமாக நடைபெற உள்ளது.
இது குறித்து ஆட்சியா் க.விஜயகாா்த்திகேயன் திங்கள்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: திருப்பூா் மாவட்டத்தில் விவசாயிகளுக்கான மாதாந்திர குறைதீா் கூட்டமானது வரும் வியாழக்கிழமை (ஜனவரி 21) காணொலிக் காட்சி மூலமாக நடைபெறுகிறது. ஆகவே, இந்தக் கூட்டத்தில் பங்கேற்கும் விசாயிகள், சங்க பிரதிநிதிகள் அந்தந்த வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் அரங்கில் காணொலிக் காட்சி மூலமாக பங்கேற்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.