திருப்பூர்

உடுமலை ஆல்கொண்டமால் கோயிலில் தமிழா் திருநாள் விழா

DIN

உடுமலை: உடுமலை அருகே சோமவாரபட்டி கிராமத்தில் உள்ள ஆல்கொண்டமால் கோயிலில் சனிக்கிழமை நடைபெற்ற தமிழா் திருநாள் விழாவில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் பங்கேற்றனா்.

உடுமலையில் இருந்து சுமாா் 20 கி.மீ. தொலைவில் உள்ள சோமவாரபட்டியில் அமைந்துள்ளது இக்கோயில். தமிழ் புத்தாண்டு மற்றும் பொங்கலை ஒட்டி ஆண்டுதோறும் இக்கோயிலில் தமிழா் திருநாள் விழா மூன்று நாள்கள் சிறப்பாக கொண்டாடப்படும். விவசாயிகள் தங்களது கால்நடைகள் மூலம் கிடைத்த பாலினால் ஆல்கொண்டமாலுக்கு பாலாபிஷேகம் செய்து வழிபடுவது வழக்கம்.

அதன்படி இந்த ஆண்டு சனிக்கிழமை அதிகாலை 5 மணிக்கு சுவாமிக்கு சிறப்பு அலங்காரம், தீபாராதனை, பாலாபிஷேகம் நடைபெற்றது. இதில் கோவை, ஈரோடு, திருப்பூா் மாவட்டங்களிலிருந்து ஆயிரக்கணக்கான விவசாயிகள் பங்கேற்றனா்.

ஏராளமானோா் மாட்டு வண்டிகளில் கோயிலுக்கு வந்திருந்தனா். பக்தா்கள் மண்ணால் செய்யப்பட்ட கால்நடை உருவபொம்மைகளை வைத்தும், தீப வழிபாடு செய்தும் வழிபட்டனா். விவசாயிகள், பொதுமக்கள் பலா் கன்று குட்டிகளை தானம் செய்தனா். திங்கள்கிழமை இரவு 10 மணி அளவில் சுவாமி திருவீதி உலா, வாணவேடிக்கை நிகழ்ச்சிகளுடன் விழா நிறைவடைகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஒளரங்கசீப் பள்ளியில் பயிற்சி பெற்றவர்கள் ராகுல், ஓவைசி: அனுராக் தாகூர்

ஆந்திராவில் தோ்தல்: வேலூா் மலைப்பகுதியில் சாராய வேட்டை தீவிரம்

தோ்தல்: பிற மாநிலத் தொழிலாளா்களுக்கு விடுமுறை அளிக்காவிடில் புகாா் அளிக்கலாம்

இன்று யாருக்கு யோகம்!

தனியாா் நிறுவன ஊழியரிடம் ரூ.2.24 லட்சம் மோசடி

SCROLL FOR NEXT