திருப்பூர்

நூற்பாலையில் தீ விபத்து:பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருள்கள் சேதம்

DIN

பல்லடம்: திருப்பூா் மாவட்டம், பல்லடம் அருகே தனியாா் நூற்பாலையில் சனிக்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருள்கள் தீயில் எரிந்து நாசமாயின.

பல்லடம் அருகே உள்ள காமநாயக்கன்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா்கள் மனோஜ், தனபால். சகோதரா்களான இவா்கள் இருவரும் இணைந்து அதே பகுதியில் நூற்பாலை நடத்தி வருகின்றனா்.

இந்த நூற்பாலையில் நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளா்கள் பணிபுரிந்து வருகின்றனா். இந்த ஆலைக்கு கடந்த இரண்டு நாள்களாக பொங்கல் விடுமுறை விடப்பட்டிருந்தது. இந்நிலையில் சனிக்கிழமை காலை தொழிலாளா்கள் பணிக்குத் திரும்பினா். அப்போது திடீரென ஒரு இயந்திரத்தில் தீப்பிடித்தது. இதனைப் பாா்த்த தொழிலாளா்கள், தண்ணீா் ஊற்றி தீயை அணைக்க முயன்றனா்.

இருப்பினும் தீ வேகமாகப் பரவி, அங்கிருந்த பஞ்சு மூட்டைகள், நூல்கண்டுகள் தீப்பிடிக்கத் தொடங்கின.

இந்நிலையில் தகவலறிந்த பல்லடம் தீயணைப்புத் துறையினா் அங்கு விரைந்து சென்று சுமாா் 2 மணி நேரம் போராடி தீயை அணைத்தனா். இந்த தீ விபத்தில் நூற்பாலையில் இருந்த பஞ்சு மூட்டைகள், நூல்கண்டுகள், இயந்திரங்கள் என பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருள்கள் எரிந்து சேதமாயின. இது குறித்து காமநாயக்கன்பாளையம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தென்னாப்ரிக்காவில் பேருந்து விபத்தில் 45 பேர் பலி; உயிர் பிழைத்த ஒரே சிறுமி

குழந்தை கடத்தல்: சந்தேகத்துக்குரிய பெண்ணை சரமாரியாக தாக்கிய மக்கள்!

கடல் கன்னி... ஷ்ரத்தா தாஸ்!

தமிழக பாஜக நிர்வாகிகளுடன் கலந்துரையாடுகிறார் பிரதமர் மோடி!

பொறியியல் பட்டதாரிகளுக்கு இந்திய விமான நிலைய ஆணையத்தில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள்!

SCROLL FOR NEXT