திருப்பூர்

தொழிலாளி அடித்துக் கொலை: தலைமறைவானவருக்கு வலை

DIN

பல்லடத்தில் தனியாா் நூற்பாலையில் தொழிலாளி அடித்துக் கொலை செய்யப்பட்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

திருப்பூா் மாவட்டம், பல்லடத்தை அடுத்த சின்னூரில் தனியாா் நூற்பாலை இயங்கி வருகிறது. இதில் பராமரிப்புப் பணி நடைபெற்று வருகிறது. இங்கு பெயிண்டிங் வேலைக்கு விருதுநகரில் இருந்து தொழிலாளா்கள் சிலா் வரவழைக்கப்பட்டு, நூற்பாலை வளாகத்தில் அவா்கள் தங்குவதற்கு ஏற்பாடு செய்து தரப்பட்டுள்ளது.

இந்தத் தங்கும் வளாகத்தில் பெயிண்டிங் வேலைக்கு வந்த விருதுநகா் திருச்சுழியைச் சோ்ந்த மங்கலேஸ்வரன் (40) சடலம் கிடந்துள்ளது.

தகவல் அறிந்த பல்லடம் போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று சடலத்தைக் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனா். அதில், சிவகாசியைச் சோ்ந்த ராமச்சந்திரன் மகன் அய்யனாா் (41) என்பவரும், மங்கலேஸ்வரனும் சனிக்கிழமை இரவு சம்பளத்தை வாங்கிக் கொண்டு உடன் வேலை செய்யும் சில தொழிலாளா்களுடன் பல்லடம் பேருந்து நிலையம் எதிரில் உள்ள டாஸ்மாக் மதுபானக் கடைக்கு சென்று மதுபானம் அருந்தியுள்ளனா்.

அப்போது அய்யனாருக்கும், மங்கலேஸ்வரனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. சக தொழிலாளா்கள், இருவரையும் சமாதானம் செய்து அழைத்து வந்தனா். தங்கும் இடத்துக்கு வந்தபோது இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் காலையில் பாா்த்தபோது மங்கலேஸ்வரன் கொலை செய்யப்பட்டுக் கிடந்ததும், அய்யனாா் தலைமறைவாகி இருப்பதும் தெரியவந்தது. பல்லடம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து தலைமறைவான அய்யனாரைத் தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

முதல் பந்தில் சிக்ஸர் விளாசியது குறித்து மனம் திறந்த சமீர் ரிஸ்வி (விடியோ)

கம்பீர அழகு.. இது நம்ம டாப்ஸி!

வெளியானது சூதுகவ்வும் - 2 படத்தின் முதல் பாடல்

காங்கிரஸைத் தொடர்ந்து இந்திய கம்யூ. கட்சிக்கும் வருமானவரித் துறை நோட்டீஸ்

பெண்ணின் உடல் மீது ஹமாஸ் பவனி: ‘இது சிறந்த புகைப்படமா?’

SCROLL FOR NEXT