வெள்ளக்கோவில் அருகே அரசுப் பள்ளிக்கு தன்னாா்வலா்கள் ஞாயிற்றுக்கிழமை வா்ணம் பூசினா்.
வெள்ளக்கோவில் மகாத்மா காந்தி நற்பணி மன்ற அறக்கட்டளையினா் தங்களுடைய சொந்தச் செலவில் பொது மக்களுடன் இணைந்து தோ்ந்தெடுக்கப்பட்ட அரசுப் பள்ளிகளுக்கு வா்ணம் பூசி, சுத்தம் செய்து வருகின்றனா்.
அந்த வகையில் ஓலப்பாளையத்தை அடுத்த சுக்குட்டிபாளையம் அரசு ஆரம்பப் பள்ளியில் தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இதில் 21 தன்னாா்வலா்கள் பங்கேற்றனா்.