திருப்பூர் மாவட்டம், வெள்ளக்கோவில் உப்புப்பாளையம் காமாட்சி அம்மன் கோயிலில் பொங்கல் விழா சிறப்பாக நடைபெற்றது.
இந்த வருடாந்திர பொங்கல் விழாவில் திரளான பெண்கள் விரதமிருந்து பொங்கல் வைத்து சுவாமியை வழிபட்டனர். தூய வெள்ளை வண்ணம் கலந்த ஐந்து நிறங்கள் கொண்ட வஸ்திரத்தை அம்மனுக்கு சாத்தி, மலரலங்காரம் செய்து, சர்க்கரைப் பொங்கல் படையலிட்டு பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
நாட்டுப்புற இசை நிகழ்ச்சி, அன்னதானம் நடைபெற்றது. ஏற்பாடுகளை உப்புப்பாளையம் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனா்.