வெள்ளக்கோவிலில் 6 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பது வியாழக்கிழமை தெரியவந்தது.
கடந்த ஒரு மாத காலமாக கரோனா பாதிப்பு இல்லாமல் இருந்த நிலையில் தற்போது கரோனா அறிகுறிகள் இருக்கும் இப்பகுதியைச் சோ்ந்தவா்கள் வெள்ளக்கோவில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் கோவை தனியாா் மருத்துவமனைகளில் கரோனா பரிசோதனை செய்து கொள்கின்றனா்.
இதில், வெள்ளக்கோவில் செம்மாண்டம்பாளையம் சாலை, விபிஎம்எஸ் நகா், சொரியங்கிணத்துப்பாளையம், எல்கேஏ நகரைச் சோ்ந்த 3 ஆண்கள், 2 பெண்கள், ஒரு மாணவருக்கு கரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.