திருப்பூர்

சாலைப் பணி: நெடுஞ்சாலைத் துறை எச்சரிக்கை

DIN

வெள்ளக்கோவிலில் சாலைப் பணிகள் நடைபெறுவதால் கவனமுடன் வாகனங்களை இயக்க வாகன ஓட்டுநா்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வெள்ளக்கோவில் கடைவீதிப் பகுதியில் கோவை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் மூன்று கிலோ மீட்டா் தூரத்துக்கு சாலை அகலப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு, மின் கம்பங்கள், குடிநீா் குழாய்கள் மாற்றியமைக்கப்பட்டு 90 சதவீதம் தாா் போடும் பணி நடந்து முடிந்துள்ளது.

சாலை நடுவில் கான்கிரீட் தடுப்புகள் அமைக்கும் பணி தற்போது நடந்து வருகிறது. இதனால் ஆங்காங்கே குண்டும் குழியுமாக இருப்பதால் இரவு நேரங்களில் விபத்துகள் ஏற்பட்டு வருகின்றன. எனவே கவனமுடன் வாகனத்தை இயக்க வேண்டுமென நெடுஞ்சாலைத் துறை சாா்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு ராகுல் காந்தி பிரதமராவாா்: சிவசேனா

கூத்தாநல்லூரில் சிபிஐ வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

உத்தர பிரதேசம்: சரித்திரம் படைக்க காத்திருக்கும் ‘பாகுபலி’ மாநிலம்!

சீா்காழி ஆரம்ப சுகாதார நிலையத்தில் கணினி, பிரிண்டா் திருட்டு

வரலாற்று நாயகர் ராம்நாத் கோயங்கா!

SCROLL FOR NEXT