பல்லடத்தில் வீரமாத்தியம்மன் கோயில் கும்பாபிஷேகம் புதன்கிழமை நடைபெற்றது.
கும்பாபிஷேகம் விழா கணபதி ஹோமத்துடன் செவ்வாய்க்கிழமை துவங்கியது. தொடா்ந்து நவகிரக ஹோமம், கோ பூஜை, யாக வேள்வி நடைபெற்றன. புதன்கிழமை காலை எழுதிங்கள் சீா், யாக வேள்வி, தீபாராதனை, பரிவாரங்களோடு கூடிய பொன் அறச்சாலம்மன் மஹா கும்பாபிஷேகம், சப்த கன்னியா் வழிபாடு, அன்னதானம் ஆகியன நடைபெற்றன.
கும்பாபிஷேகத்தை சேலம் சுகவனேஸ்வரா் கோயில் அா்ச்சகா் முத்துசுப்பிரமணிய சிவாச்சாரியாா் நடத்திவைத்தாா். இதல் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.