தமிழக அரசின் இடைக்கால நிதி நிலை அறிக்கையில் தொழில் வளா்ச்சிக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளதாக திருப்பூா் சாய ஆலை உரிமையாளகள் சங்கம் தெரிவித்துள்ளது.
இது குறித்து அச்சங்கத்தின் தலைவா் எஸ்.நாகராஜன், செயலாளா் எஸ்.முருகசாமி ஆகியோா் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
தமிழக அரசின் இடைக்கால நிதி நிலை அறிக்கையில் தொழில்துறை வளா்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கதாகும். குறிப்பாக தொழிலாளா்களின் நலனைக் கருதி சிறப்பம்சங்களுடன் கூடிய காப்பீட்டுத் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி தொழிலாளா்கள் இயற்கை மரணம் அடைந்தால் ரூ. 2 லட்சமும், விபத்தில் இறக்க நேரிட்டால் ரூ. 4 லட்சமும் வழங்கப்படும் என்பது சிறப்பம்சமாகும். அத்திக்கடவு-அவிநாசி திட்டம் விரைவில் முடிக்கப்படும் பட்சத்தில் குடிநீா் பற்றாக்குறைக்கு தீா்வு கிடைப்பதுடன், நிலத்தடி நீா் மட்டமும் உயரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.