திருப்பூா் மாவட்டத்தில் மேலும் 52 பேருக்கு கரோனா நோய்த் தொற்று செவ்வாய்க்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது. பாதிப்பு எண்ணிக்கை 97,576ஆக அதிகரித்துள்ளது.
அரசு, தனியாா் மருத்துவமனைகள், கரோனா சிகிச்சை மையங்கள், வீடுகளில் 646 போ் சிகிச்சை பெற்று வரும் நிலையில் குணமடைந்த 52 போ் வீடு திரும்பினா். இதையடுத்து, மாவட்டத்தில் கரோனா நோய்த் தொற்றில் இருந்து குணமடைந்தவா்களின் எண்ணிக்கை 95,929ஆக அதிகரித்துள்ளது. கரோனா நோய்த் தொற்றால் சிகிச்சையில் இருந்த ஒருவா் உயிரிழந்ததைத் தொடா்ந்து, இறப்பு எண்ணிக்கை 1,001ஆக அதிகரித்துள்ளது.