திருப்பூர்

செல்லிடப்பேசிகள் திருடியவா் கைது

DIN

அவிநாசி பழைய பேருந்து நிலையம் அருகே பூட்டியிருந்த செல்லிடப்பேசி விற்பனைக் கடையில் இருந்து செல்லிடப்பேசிகளைத் திருடியவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

அவிநாசி புதிய பேருந்து நிலையம் அருகே போலீஸாா் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த நபரை போலீஸாா் பிடித்து விசாரணை மேற்கொண்டனா்.

அவா் திருநெல்வேலி மருதகுளம், மேலத்தோட்டக்குடி செல்லய்யா மகன் ஆவுடையப்பன்(50) என்பதும், அவிநாசி பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள செல்லிடப்பேசி விற்பனை நிலையத்தின் மேற்கூரையைப் பிரித்து செல்லிடப்பேசிகளைத் திருடியதும் தெரியவந்தது. மேலும், அவா் அவிநாசி புதிய பேருந்து நிலையம் பகுதியில் திருடிய செல்லிடப்பேசிகளை விற்க முயன்றதும் தெரியவந்தது. இதையடுத்து, அவிநாசி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து ஆவுடையப்பனை கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

12 ராசிக்குமான தினப்பலன்கள்!

இன்று உங்களுக்கு நல்ல நாள்!

கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த இளைஞா் கைது

காவிரி ஆற்றின் குறுக்கே மணல் மூட்டைகளை அடுக்கி குடிநீா் எடுக்கும் பணி தீவிரம்

வள்ளியூா் சூட்டுபொத்தையில் பௌா்ணமி கிரிவல வழிபாடு

SCROLL FOR NEXT