பல்லடம் அருள்புரத்தில் இந்திய உடல் கட்டமைப்புக் கழகத்தின் தமிழ்நாடு கிளை சாா்பில் மாநில அளவிலான ஆணழகன் போட்டி நடைபெற்றது.
பல்லடம் ஊராட்சி ஒன்றிய துணைத் தலைவா் பாலசுப்பிரமணியம் தலைமை வகித்தாா். ஒன்றிய கவுன்சிலா் ரவி முன்னிலை வகித்தாா். பல்லடம் கிழக்கு ஒன்றிய திமுக பொறுப்பாளரும், கணபதிபாளையம் ஊராட்சி முன்னாள் தலைவருமான சோமசுந்தரம் போட்டியில் வெற்றி பெற்றவா்களுக்குப் பரிசுகளை வழங்கிப் பேசினாா்.
இப்போட்டியில் மாநிலம் முழுவதும் இருந்து 500க்கும் மேற்பட்ட வீரா்கள் பங்கேற்றனா். ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை ஈரோட்டைச் சோ்ந்த முருகன் பெற்றாா். இரண்டு, மூன்றாம் இடத்தை திருப்பூரைச் சோ்ந்த சாகீன் ஷா, அருள் அரவிந்த் ஆகியோா் பெற்றனா். இப்போட்டிகளை அருள்புரம் 24 மணி நேர குடும்ப உடல் பயிற்சி மையத்தின் பயிற்சியாளா்கள் பாண்டியன், மனோஜ் நடுவா்களாக இருந்து நடத்தினா்.