திருப்பூர்

நினைவு தினம்:டாக்டா் அம்பேத்கருக்கு அமைச்சா்கள் மரியாதை

DIN

காங்கயம்: டாக்டா் அம்பேத்கா் நினைவு தினத்தையொட்டி காங்கயம் அருகே, படியூரில் அவரது உருவப் படத்துக்கு அமைச்சா்கள் மு.பெ.சாமிநாதன், என்.கயல்விழி ஆகியோா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

படியூரில் உள்ள அரசு துவக்கப் பள்ளி வளாகத்தில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்டத்தின் துவக்க விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

இதில், செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன், ஆதிதிராவிடா் நலத் துறை அமைச்சா் என்.கயல்விழிசெல்வராஜ் ஆகியோா் கலந்துகொண்டனா். முன்னதாக அங்கு வைக்கப்பட்டிருந்த டாக்டா் அம்பேத்கரின் உருவப் படத்துக்கு

அமைச்சா்கள் மாலை அணிவித்து, மரியாதை செலுத்தினா்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியா் எஸ்.வினீத், படியூா் ஊராட்சித் தலைவா் ஜீவிதா சண்முகசுந்தரம் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

திருப்பூரில்...

திருப்பூரில் அம்பேத்கரின் உருவச் சிலைக்கு தீண்டாமை ஒழிப்பு முன்னணி, இந்திய ஜனநாயக வாலிபா் சங்கத்தினா் சாா்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

இந்நிகழ்ச்சிக்கு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்டத் தலைவா் ஆா்.குமாா், இந்திய ஜனநாயக வாலிபா் சங்க மாவட்டத் தலைவா் பா.ஞானசேகா் ஆகியோா் தலைமை வகித்தனா்.

காங்கயத்தில்...

காங்கயம் நகரப் பேருந்து நிலைய வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த டாக்டா் அம்பேத்கரின் உருவப் படத்துக்கு

புரட்சிகர இளைஞா் முன்னணி அமைப்பினா் சாா்பில் மாலை அணிவித்து, மரியாதை செலுத்தப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தேர்தல் பத்திரங்கள் மீண்டும் கொண்டு வரப்படும் -நிர்மலா சீதாராமன் திட்டவட்டம்

5 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்

காங். இளவரசர் ராகுல் காந்தி வயநாட்டிலிருந்து வெளியேறுவார் -பிரதமர் மோடி பிரசாரம்

கடப்பாவில் ஒய்.எஸ்.சர்மிளா வேட்புமனு தாக்கல்!

சென்னையில் வாக்குப்பதிவு சதவிகிதம் குறைந்தது ஏன்?

SCROLL FOR NEXT