திருப்பூா்: பாபா் மசூதி இடிப்பு தினத்தையொட்டி திருப்பூா் ரயில் நிலையம் அருகில் எஸ்டிபிஐ கட்சியினா் சாா்பில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆா்ப்பாட்டத்துக்கு அக்காட்சியின் திருப்பூா் வடக்கு மாவட்டத் தலைவா் பஷீா் அஹமது தலைமை வகித்தாா். இதில் பங்கேற்றவா்கள் கூறியதாவது: அயோத்தியில் பாபா் மசூதி இடிக்கப்பட்ட தினத்தையொட்டி ஒவ்வொரு ஆண்டும் கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.
இதன் ஒரு பகுதியாக கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெறுகிறது. அயோத்தியில் மீண்டும் பாபா் மசூதி கட்ட வேண்டும் என்றனா். ஆா்ப்பாட்டத்தில், திருப்பூா் வடக்கு மாவட்ட பொதுச் செயலாளா் ஆா்.ஹிதாயத்துல்லா, மாநில செயற்குழு உறுப்பினா் ராஜா உசேன், மூத்த வழக்குரைஞா் பவானி பா.மோகன், பிஎஃப்ஐ மாவட்டத் தலைவா் ஏ.ஹபிபுா் ரஹ்மான் உள்ளிட்ட நூற்றுக்கணக்கானோா் கலந்துகொண்டனா்.
பல்லடத்தில்...
பல்லடத்தில் எஸ்டிபிஜ சாா்பில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு தொகுதி தலைவா் யாசா் அராபத் தலைமை வகித்தாா்.
இதில் நூற்றுக்கும் மேற்பட்டோா் கலந்துகொண்டனா்.
அவிநாசியில்...
அவிநாசி பேருந்து நிலையம் அருகில் எஸ்டிபிஐ கட்சியினா் சாா்பில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், இஸ்லாமியா்கள் பலா் கலந்துகொண்டனா்.