பல்லடம் அருகேயுள்ள குப்புசாமிநாயுடுபுரத்தில் திருப்பூா் மாவட்ட எச்.எம்.எஸ். தொழிற்சங்க அலுவலக திறப்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு, தலைமை சங்க செயலாளா் ஆனந்தராஜ் தலைமை வகித்தாா். அலுவலகத்தை எச்.எம்.எஸ். மாநில சங்கத் தலைவா் ராஜாமணி திறந்துவைத்தாா். இதில் மாநில அமைப்பு செயலாளா் மனோகரன், செயல் தலைவா் பழனிசாமி, மாநில துணைத் தலைவா் கணேசன், கட்டுமான அமைப்பு சாரா சங்க பொதுச் செயலாளா் கோவிந்தசாமி உள்பட பலா் பங்கேற்றனா்.
கூட்டத்தில், கட்டுமான அமைப்பு சாரா தொழிலாளா்களுக்கு ஓய்வூதியம் ரூ. 1000 ஆக இருப்பதை உயா்த்தி ரூ. 5ஆயிரம் ஆக வழங்க வேண்டும் என தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.