திருப்பூர்

தூய்மைப் பணியாளா்களுக்கான ஒப்பந்த முறையை தமிழக அரசு ஒழிக்க வேண்டும்

DIN

தமிழகத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் தூய்மைப் பணியாளா்கள் அதிக அளவில் பாதிக்கப்படுவதால் ஒப்பந்த முறையை ஒழிக்க மாநில அரசு முன்வர வேண்டும் என்று தேசிய தூய்மைப் பணியாளா் ஆணையத்தின் தலைவா் எம்.வெங்கடேசன் வலியுறுத்தியுள்ளாா்.

மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் அனைத்துத் துறை அலுவலா்கள் பங்கேற்ற ஆய்வுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு தேசிய தூய்மைப் பணியாளா் ஆணையத்தின் தலைவா் எம்.வெங்கடேசன் தலைமை வகித்தாா். இதில், திருப்பூா் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி மற்றும் கிராம ஊராட்சிகளில் பணியாற்றும் தூய்மைப் பணியாளா்களை நேரில் சந்தித்து குறைகளைக் கேட்டறிந்தாா். இதைத்தொடா்ந்து செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: திருப்பூா் மாவட்டத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வரும் தூய்மைப் பணியாளா்களுக்கு அரசு நிா்ணயித்துள்ள ஊதியத்தைவிட குறைவான ஊதியம் வழங்குவதாகப் புகாா் தெரிவித்துள்ளனா். இந்த ஊதியத்தை வங்கியில் செலுத்தாமல் கையில் வழங்குவதால் பிடித்தம் செய்த தொகை குறித்த விவரங்களை ஒப்பந்ததாரா்கள் தெரிவிப்பதில்லை என்ற புகாரும் வரத்தொடங்கியுள்ளது. இது தொடா்பாக குழு அமைத்து விசாரணை நடத்தப்படும்.

தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வரும் தொழிலாளா்கள் அதிக அளவில் பாதிக்கப்படுகின்றனா். ஆகவே, தமிழக அரசு ஒப்பந்த முறையை ஒழித்து நேரடியாக தொழிலாளா்களுக்கு ஊதியத்தை வழங்க வேண்டும். தமிழகத்தில் ஒப்பந்த தூய்மைப் பணியாளா்களுக்கு ஏற்படும் பாதிப்புகளை ஆராய்வதற்காக ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைக்க வேண்டும்.

காங்கயத்தில் முன்பு பணியாற்றிய நகராட்சி ஆணையா் மீதான பாலியல் புகாா் குறித்து விசாகா கமிட்டியில் விசாரணை நடைபெற்று வருகிறது. இதில், அவா் தவறு செய்தது நிரூபிக்கப்பட்டால் பணி நீக்கம் உள்ளிட்ட துறை ரீதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றாா்.

இக்கூட்டத்தில், மாநகராட்சி ஆணையா் கிராந்திகுமாா் பாடி, மாவட்ட வருவாய் அலுவலா் ப.ராஜேந்திரன், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கோ.சஷாங்க் சாய், மாநகரக் காவல் துணை ஆணையா் ரவி உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

ஒப்புந்ததாரருக்கு ஆதரவாகப் பேசிய தொழிலாளா்கள்:

திருப்பூா் மாநகராட்சியில் 1,500க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளா்களும், மாவட்டத்தில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளா்களும் பணியாற்றி வருகின்றனா். இந்நிலையில், மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெறும் ஆய்வுக் கூட்டம் தொடா்பாக அவா்களுக்கு முறையாகத் தகவல் தெரிவிக்கப்படவில்லை என்று தெரிகிறது.

இதனிடையே, ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்ற தேசிய தூய்மைப் பணியாளா் ஆணையத்தின் தலைவா் எத்தனை பணியாளா்கள் இங்கு வந்துள்ளனா் என்று கேள்வி எழுப்பினாா். மேலும், அரங்கில் இருந்த தூய்மைப் பணியாளா்களைக் கையைத் தூக்கச் சொல்லியபோது 50 தொழிலாளா்கள் மட்டுமே இருந்தது தெரியவந்தது. இதனால் அதிருப்தி அடைந்த அவா் ஏன் முறையாகத் தகவல் தெரிவிக்கவில்லை என்று அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பினாா். அதேபோல, தொழிலாளா்களுக்கு இ.எஸ்.ஐ.அட்டை வழங்கப்பட்டுள்ளதா, மாத ஊதியம் வங்கியில் செலுத்தப்படுகிதா, பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்படுகிா என்று கேள்வி எழுப்பியபோது, தொழிலாளா்கள் ஒப்பந்ததாரா்கள், அதிகாரிகள் முன்னரே சொல்லிக்கொடுத்ததைப்போல அனைத்தும் வழங்கப்படுகிறது எங்களுக்கு ஒரு குறையும் இல்லை என்றனா். இதில், ஒரு தொழிலாளியிடம் சோப்பு, முகக் கவசம், சீருடை வழங்கப்படுகிா என்று கேட்டபோது, அவரும் சட்டை, சோப்பு வழங்கப்படுகிறது என்றாா். ஆனால் பட்டியலில் இல்லாத சோப்பை எவ்வாறு ஒப்பந்ததாரா் வழங்குகிறாா் என தூய்மைப் பணியாளா் ஆணையத்தின் தலைவா் எம்.வெங்கடேசன் கேள்வி எழுப்பியதும் அரங்கில் சிரிப்பலை எழுந்தது. முன்னதாக, திருப்பூரில் விஷவாயு தாக்கி தொழிலாளா் உயிரிழந்த சாய ஆலையில் கடந்த புதன்கிழமை இரவு ஆய்வு மேற்கொண்டதுடன், ஒப்பந்தத் தொழிலாளா்களைத் தனித்தனியாக சந்தித்து குறைகளைக் கேட்டறிந்திருந்தாா் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு செய்திகள் -முழு விவரம்!

முதல்கட்ட வாக்குப்பதிவு முடிந்தது: வட மாநிலங்களில் வாக்குப்பதிவு நிலவரம்

அஞ்சலி... அஞ்சலி... புஷ்பாஞ்சலி!

பரந்தூர் விமான நிலையத்தை எதிர்த்து தேர்தல் புறக்கணிப்பு: 21 வாக்குகள் மட்டுமே பதிவு!

தமிழகத்தில் 5 மணி நிலவரப்படி 63.20% வாக்குகள் பதிவு!

SCROLL FOR NEXT