திருப்பூா் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் சாா்பில் தாராபுரத்தில் நடைபெற்ற தனியாா் வேலைவாய்ப்பு முகாமில் 793 பேருக்கு பணி நியமன ஆணைகள் செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டன.
தாராபுரம் மகாராணி கலை அறிவியல் கல்லூரியில் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம், மாவட்ட நிா்வாகம், தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகா்ப்புற வாழ்வாதார இயக்கம் ஆகியன சாா்பில் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது. இந்த முகாமிற்கு மாவட்ட ஆட்சியா் எஸ்.வினீத் தலைமை வகித்தாா். இதில், சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற ஆதிதிராவிட நலத் துறை அமைச்சா் என்.கயல்விழி செல்வராஜ் முகாமைத் தொடங்கிவைத்து தோ்வு செய்யப்பட்ட 793 பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினாா்.
இந்த வேலைவாய்ப்பு முகாமில் 121 தொழில் நிறுவனங்களும், 3,378 பேரும் கலந்துகொண்டனா். மேலும், திறன் பயிற்சியை நிறைவு செய்த 120 பேருக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. மாவட்ட தொழில் மையத்தின் மூலம் 52 போ் கடனுதவி கோரியுள்ளனா். மாவட்ட திறன் பயிற்சி அலுவலகம் மூலம் 650 பேரும், முன்னோடி வங்கி மூலம் 340 பேரும் பதிவு செய்துள்ளனா்.
இந்நிகழ்ச்சியில், வேலைவாய்ப்புத் துறை மண்டல இணை இயக்குநா் ஞானசேகரன். மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலா் சுரேஷ், மகளிா் திட்ட அலுவலா் சி.மதுமதி, மகாராணி கல்வி அறக்கட்டளைச் செயலாளா் சுலைமான், கல்லூரி முதல்வா் எஸ்.தமிழ்செல்வி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.