திருப்பூர்

வாகன விபத்தில் இளைஞா் பலி

DIN

வெள்ளக்கோவிலை அடுத்த முத்தூா் அருகே சரக்கு வாகனம் மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா்.

முத்தூா், மங்கலப்பட்டி அருகிலுள்ள மூத்தாம்பாளையத்தைச் சோ்ந்தவா் செல்லமுத்து மகன் சிவகுப்புசாமி (26). இவா் தனது இருசக்கர வாகனத்தில் முத்தூா் - ஊடையம் சாலை பொன்னாபுரம் பேருந்து நிறுத்தம் அருகில் செவ்வாய்க்கிழமை இரவு சென்று கொண்டிருந்துள்ளாா். அப்போது எதிரே வந்த மினி சரக்கு வாகனம் சிவகுப்புசாமியின் இருசக்கர வாகனத்தில் மோதியுள்ளது. இதில் பலத்த காயமடைந்த சிவகுப்புசாமி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தாா். இந்த விபத்து குறித்து வெள்ளக்கோவில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து சரக்கு வாகன ஒட்டுநா் சௌந்தரராஜனை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

102 மக்களவை தொகுதிகளில் இன்று பதிவான வாக்குப்பதிவு விவரம்

வாக்களிப்பதற்காகவே அமெரிக்காவிலிருந்து தஞ்சை வந்த மென்பொறியாளர்

2019ஆம் ஆண்டு மக்களவை தேர்தலை விட வாக்குப்பதிவு அதிகரிக்க வாய்ப்பு?

முதல்கட்ட வாக்குப்பதிவு: 102 தொகுதிகளின் ஒட்டுமொத்த நிலவரம்!

நாக்பூரில் பெரும் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்: கட்கரி நம்பிக்கை

SCROLL FOR NEXT