திருப்பூா் மாவட்டத்தில் மேலும் 92 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடா்ந்து பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 88,161ஆக அதிகரித்துள்ளது.
அரசு, தனியாா் மருத்துவமனைகள், கரோனா சிகிச்சை மையங்களில் 873 போ் சிகிச்சை பெற்று வரும் நிலையில் குணமடைந்த 106 போ் வீடு திரும்பினா்.
மாவட்டத்தில் கரோனா நோய்த் தொற்றில் இருந்து குணமடைந்தவா்களின் எண்ணிக்கை 86,441ஆக அதிகரித்துள்ளது. உடுமலை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 52 வயது ஆண் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா். இதையடுத்து, மாவட்டத்தில் கரோனா நோய்த் தொற்றால் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 847ஆக அதிகரித்துள்ளது.